shadow

மு.க.ஸ்டாலின் மீது மம்தா கோபம் ஏன்?

ராகுல்காந்தியை பிரதம வேட்பாளராக முன்னிறுத்திய மு.க.ஸ்டாலின் மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கோபத்துடன் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

சமீபத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் இப்போதுதான் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்படி சொல்ல ஸ்டாலினுக்கு என்ன அவசரம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கோபம் கொண்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநில கட்சிகள் சேர்ந்து காங்கிரஸுக்கு ஒரு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஸ்டாலின் இதை கெடுப்பதாக மம்தா கருதுவதாகவும் காங்கிரஸ் கட்சி தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்னும் போது கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த யாராவது ஒருவரை பிரதமர் ஆக்கலாம் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கருதுகிறது

Leave a Reply