shadow

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க தடை: நீதிமன்றம் அதிரடி

மு.க.ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் தன் மிது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணையை ரத்து செய்யக்கோரி சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக செப்டம்பர் 18ஆம் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து விமர்சித்து பேசியதாக ஸ்டாலின் மீது அவதூறுவழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply