shadow

மு.க.ஸ்டாலினை அடுத்து சந்திரபாபு நாயுடு சந்திக்கும் முக்கிய தலைவர்

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். நவம்பர் 19ம் தேதி சந்திரபாபு நாயுடு மேற்குவங்கம் சென்று அங்கு அவர் மம்தாவை சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் டில்லி சென்ற சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, யெச்சூரி , முலாயம்சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply