முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல் பசுவுக்கு ஷெட் போட்டு கொடுத்த தந்தை-மகன்

முல்லை தேர் கொடுத்த பாரி வள்ளல் மன்னன் குறித்து நாம் பாடங்களில் பார்த்துள்ளோம். அதேபோல் தற்போது நிஜ வாழ்க்கையில் எழுந்து நடக்க முடியாத பசு ஒன்றுக்கு இருவர் ஷெட் போட்டு கொடுத்துள்ளனர்.

படத்தில் காணப்படும் பசுவின் காலில் பிரச்சனை என்பதால் நடக்க முடியாது ஓரிடத்தில் முடங்கியிருந்தது. கடும் வெயிலில் பசு முடங்கி கிடந்ததை பார்த்த அந்த பகுதி வழியாக சென்ற தந்தை மகன் ஆகிய இருவர் உடனே அந்த பகுதி ஒன்றில் இருந்த கடையில் சில பிளைவுட் ஷீட்டுக்கள் விலைக்கு வாங்கி பசுவுக்காக தற்காலிக ஷெட் ஒன்றை போட்டு கொடுத்தனர். அதன்பின் அந்த பசு நிழலில் இருந்தது. அதுமட்டுமின்றி கால்நடை மருத்துவரை அழைத்து வந்து அந்த பசுவுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தனர். தற்போது அந்த பசு உடல்நிலை தேறி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்ற இந்த தந்தை-மகன் செயலுக்கு ஒரு சல்யூட் அடிப்போமா?

Leave a Reply