நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் திடீரென எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்

ஆனால் ரீப்ளேவில் அவர் அவுட் இல்லை என்பது உறுதியானது. எல்பிடபிள்யூ என்று அம்பயர் அவுட் கொடுத்ததும் முரளி விஜய் தனது சக வீரரான டூபிளஸ்சிஸ்ஸிடம் ஆலோசனை செய்யாமல் வெளியேறிவிட்டார்

டூபிளஸ்சிஸ்அவுட் இல்லை என்று கூறியதை முரளிவிஜய் கவனிக்கவே இல்லை ஆனால் அதே நேரத்தில் தோனிக்கு இதே போன்ற ஒரு நிலைமை ஏற்பட்ட போது அவர் உடனடியாக தனது சக வீரரான டூபிளஸ்சிஸ்ஸிடம் ஆலோசித்து அதன் பின்னர் ரெவ்யூ எடுத்து போது தோனி அவுட் இல்லை என்பது உறுதியானது

முரளி விஜய்யும் அதேபோல் சக வீரரிடம் ஆலோசனை செய்து இருந்தால் கண்டிப்பாக அவரும் அவுட்டாகி இருக்க மாட்டார் என்பது குறிப்பிடதக்கது. முரளி விஜய் செய்த தவறை தோனி செய்யாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

Leave a Reply