மும்பை திரும்புகிறார் கவர்னர் வித்யாசாகர் ராவ்
தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான ஆட்சி மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்றும் சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கவனர் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் வலியுறுத்தி வரும் நிலையில் இன்று அவர் திடீரென மும்பைக்கு திரும்புகிறார்
இன்று காலை 11.20 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து மும்பைக்கு செல்லவுள்ளதாகவும், தமிழக விவகாரம் குறித்து அவர் இன்னும் சில நாட்கள் கழித்தே உரிய முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கவர்னரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘இன்னும் ஒரு வாரத்தில் கவர்னர் சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் குடியரசு தலைவரை சந்திப்பது மட்டுமின்றி நீதிமன்றத்தையும் நாடுவோம் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.