shadow

முன்னாள் மேயர் இறுதிச்சடங்கில் வரலாறு காணாத கூட்டம்: நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

வங்க தேசத்தில் உள்ள சிட்டகாங் என்ர நகரின் முன்னாள் மேயர் சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில் அவரது இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இந்த இறுதி சடங்கில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், காவல்துறை பாதுகாப்பும் இல்லாததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply