shadow

முன்னாள் அமைச்சர் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் கேட்டு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.95 லட்சம் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் சில நாட்களாக தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மிக விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

Leave a Reply