முத்ரா கடன் மோசடி: தமிழகம் முதலிடம் என நிர்மலா சீதாராமன் தகவல்
மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டங்களில் ஒன்று முத்ரா கடன் திட்டம். இந்த திட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முத்ரா திட்டத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை 19 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 ஆயிரத்து 313 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 344 மோசடி சம்பவங்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள, சுமார் 14 ஆயிரத்து 578 கோடி ரூபாய் உரிமை கோர ஆளில்லாமல் இருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசு, முத்ரா கடன், தமிழகம், மோசடி
Leave a Reply
You must be logged in to post a comment.