முதுநிலை உளவியல் படிப்பு: செப்.16-இல் நுழைவுத்தேர்வு
சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2 ஆண்டு முதுநிலை மருத்துவ உளவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறவுள்ளது.
சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2016-17 கல்வியாண்டுக்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil Clinical Psychology)படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இது இரண்டாண்டு படிப்பாகும்.
இந்தப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு வரும் 16-ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கத் தகுதியானவர்களின் பட்டியல் தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.