முதல் நாளே பாலத்தில் சிக்கிய பேருந்து: கோவையில் பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று கோவையில் கட்டப்பட்டிருந்த மேம்பாலம் ஒன்றை காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் திறாப்புவிழா நிகழ்ச்சிக்காக அரசு பேருந்து ஒன்று இப்பாலத்தின் முன் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது

முதல்வர் திறந்துவைத்தவுடன் அந்த பேருந்து பாலத்தின் வழியாக சென்றது. அப்போது பாலத்தில் கட்டப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் காரணமாக பேருந்து சிக்கிக்கொண்டது இதனை அடுத்து அதிமுக தொண்டர்கள் அலங்கார வளைவினை விடுவித்து பேருந்துக்கு வழிவிட்டனர்

ஏற்கனவே இந்த பாலம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் குறுகிய பாலத்தில் அலங்கார வளைவை கட்டியதால் பேருந்து சிக்கியதாக இணையதள வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். பாலம் திறக்கப்பட்ட முதல் நாளே பாலத்தில் பேருந்து சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply