முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியது சரிதான் – கி.வீரமணி.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு தமிழிசை செளந்திரராஜன், நடிகர் விவேக் ஓபராய், எச்.ராஜா உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்தை தான் ஆதரிப்பதாக திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேட்டியளித்தார். அப்போது 3-வது அணி உருவாக்கும் முயற்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பின் வலுவிழந்து பாஜகவுக்கு எதிரான ஒரே அணியாக மாறும் என்றும், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியது சரிதான் என்றும் கூறினார்.

Leave a Reply