shadow

முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி: நெஹ்ராவுக்கு கிடைத்த பரிசு

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா, தவான் தலா 80 ரன்கள் அடித்தனர்.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி-20 போட்டி வரும் நவம்பர் 4ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும்

Leave a Reply