shadow

முதல் இடத்தை பிடித்த யாஷிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்

இந்த வார டாஸ்க்கில் அதிக புள்ளிகள் பெற்று ரூ.5 லட்சம் பரிசு பெற்றவர் யாஷிகா. அதேபோல் பிக்பாஸ் போட்டியாளர்களை வரிசைப்படுத்த வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டபோது யாஷிகாவை முதலிடத்தில் வைக்க அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். 2 முதல் 6வது இடத்தை பிடிக்க பெரிய ரணகளமே நடந்தது

இந்த நிலையில் டாஸ்க்கை சரியாக செய்து முதலிடத்தை பெற்ற யாஷிகாவால் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாததால் குறைந்த வாக்குகளை பெற்று இன்று வெளியேறுகிறார். அதேபோல் பெண் போட்டியாளர்களிடம் சிக்கியுள்ள ஒரே ஆண் போட்டியாளராகிய பாலாஜியும் இந்த வாரம் வெளியேறுகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த தன்னுடைய ஒரே தோழியான யாஷிகாவின் வெளியேற்றம் ஐஸ்வர்யாவுக்கு கடும் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கும். இந்த வாரம் மற்ற மூவரையும் அவர் சமாளித்தாக வேண்டும். குறிப்பாக விஜயலட்சுமியை சமாளிப்பது என்பது ஐஸ்வர்யாவுக்கு பெரும் சவால். அட்

Leave a Reply