முதல்வர் மீது கல்வீச்சு, கருப்புக்கொடி: மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அவர்களின் வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி கருப்புக்கொடி காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர், அமித்ஷா உள்பட பலருக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அறவழியில் கருப்புக்கொடி காட்டிய நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது சிதி அருகே அவர் வாகனத்தின் மீது கல்வீசப்பட்டதாகவும், அவருக்கு போராட்டக்காரர்கள் கருப்புக்கொடி காட்டியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், ராஜஸ்தானிலும் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜியின் வாகனத்தின் மீது சிலர் கல்வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மாநில அரசுகள் மீது மக்கள் கடும் கோபத்துடன் உள்ளது, மத்தியில் ஆளும் பாஜகவை கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.