முதல்வர் பழனிசாமி நோட்டீஸை வாங்க மறுத்த பத்திரிகையாளர்!
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் விளைவிப்பதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் 1.10 கோடி ரூபாய் கேட்டு முதலமைச்சர் தரப்பில் மானநஷ்ட வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்த வழக்கின் நோட்டீஸை பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் வாங்க மறுத்தனர். இதனையடுத்து டெல்லி மற்றும் கேரளாவில் உள்ள செய்தி தாள்களில் நோட்டீஸை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.