முதல்வர் சென்ற விமானம் திடீர் கோளாறு: பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ள நிலையில் இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொள்ள தூத்துக்குடி வரை விமானத்தில் சென்று , அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்த்து. இதனையடுத்து சென்னையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் மூலம் காலையிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்று, பின்னர் குமரிக்கு கார் மூலம் செல்வார் என கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.