ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கு நல வாரியம்: முதல்வருக்கு நன்றி
ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு என நலவாரியம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கான நலவாரியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று ஓய்வு பெற்ற தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் நலச்சங்க கூட்டமைப்பினர் சந்தித்தனர். ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கான நல வாரியம் அமைத்தமைக்காக அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.