முதல்வரின் சொந்த தொகுதியில் இலவச ஹெல்மெட் விநியோகம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நடந்து வரும் நிலையில் முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடியில் நேற்று ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனஓட்டிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கல்ந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக ஹெல்மெட் வழங்கி காவல்துறையினர் அசத்தி உள்ளனர் …
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்திய சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபாகணிகர் இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கி உள்ளார். மேலும் பேரணியில் ஏற்கனவே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிய ஒவ்வொருவருக்கும் ரூ.200 ரொக்க பரிசு வழங்கி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பாராட்டி உள்ளார் ..
Leave a Reply
You must be logged in to post a comment.