முதல்முறையாக ஒயிட்வாஷ் ஆன நியூசிலாந்து: இந்தியா அபார வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே 4 வெற்றிகளை பெற்ற இந்திய அணி இன்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா இந்திய அணியின் தலைமை ஏற்றார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்கள் எடுத்த நிலையில் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது

ஆனால் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் சோபிக்காத 156 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 7 ரன்களில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது

நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் முதல்முறையாக ஒயிட்வாஷ் ஆனது அந்நாட்டு அணிக்கும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆட்டநாயகன்: பும்ரா
தொடர் நாயகன்: கே.எல்.ராகுல்

Leave a Reply