shadow

முதல்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற குரோஷியா: பரிதாபமாக வெளியேறிய இங்கிலாந்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கிரண் டிரிப்பா் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் பெறச் செயதார். அதன் பின்னா் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடாததால் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது பாதியில் குரோஷியா அணியின் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்து அணியை சமன் செய்ய உதவினார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனைத் தொடா்ந்து இரண்டாவது கட்டமாக கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தின் 109வது நிமிடத்தில் குரோஷியாவின் மாரியோ மாண்ட்சிக் ஒரு கோல் அடித்து தனது அணி வெற்றி பெற உதவினார். அதன்படி குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

Leave a Reply