முதலமைச்சர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் சந்திப்பேன்: சடகோப ராமானுஜ ஜீயர்
தமிழக முதல்வர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் அவரை நேரில் சந்தித்து கி.வீரமணி மீது புகார் தெரிவிப்பேன் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,தமிழகத்தில் இந்து மத கடவுள்களை பற்றி தவறாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், கீ.வீரமணி கிருஷ்ணனை அவதூறாக பேசியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இது குறித்து பிரசாரத்திற்காக முதலமைச்சர் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் போது அவரை நேரில் சந்தித்து புகார்தெரிவிக்கப் போவதாகவும் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்
மேலும் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் அயோத்தியில் விரைவில் ராமருக்கு கோயில் கட்டப்படும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.