shadow

முதலமைச்சரை அடுத்தடுத்து சந்தித்த தமிழிசை, பொன்ராதாகிருஷ்ணன்

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது.

திருவாரூர் இடைத்தேர்தல் நிலை குறித்த அறிக்கை, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரை தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழிசை சவுந்தரராஜனை அடுத்து சில நிமிடங்களில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் முதல்வரை சந்தித்து ஆலோசனை செய்தார்.

Leave a Reply