முடிந்தது அமெரிக்க பயணம்: துபாய் செல்கிறார் முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மாலை அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு துபாய் செல்ல உள்ளார். நேற்று சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார் தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் தமிழகத்தில் டெஸ்லா கார் தொழிற்சாலை தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த் நிலையில், இன்றுடன் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து துபாய் செல்கிறார். செப்டம்பர் 8, 9 தேதிகளில் துபாயில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.

முதல்வரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு தொழில் நிறுவனங்களை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்ததுடன், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply