shadow

முக்கிய திரையரங்குகள் ‘மெர்சல்’ படத்தை திரையிட மறுப்பது ஏன்?

சென்னை காசி திரையரங்கம் உள்பட ஒருசில முக்கிய திரையரங்குகள் விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை திரையிடவில்லை என்று அறிவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்யும் கெடுபிடிகளே ஒருசில திரையரங்குகள் ஒதுங்கி கொள்ள காரணம் என்று கூறப்படுகிறது. வசூலில் பகிரப்படும் சதவிகிதங்கள் மற்றும் 50 நாட்கள் கண்டிப்பாக இரண்டு காட்சிகள் ஓட்ட வேண்டும் என்பது உள்பட ஒருசில நிபந்தனைகளை தயாரிப்பு நிறுவனம் விடுத்துள்ளதாகவும், இதற்கு ஒப்புக்கொள்ளாததால் ‘மெர்சல்’ படத்தை திரையிட சில திரையரங்குகள் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் உலகம் முழுவதும் இப்போது வரை சுமார் 4000 திரையரங்குகளில் நாளை மறுநாள் ‘மெர்சல்’ திரையிடப்படுவது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply