மீராமிதுன் மீது பரபரப்பான புகார் கூறிய ஜோ மைக்கேல் பிரவீன் அதிரடி கைது

நடிகை மீரா மிதுன் கலந்துகொண்ட மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும் அவ்வப்போது மீராவின் மீது குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பான வீடியோக்களை வெளியிட்டு வந்தவருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் அதிரடியாக மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்

மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி மற்றும் அழகுக்கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜோ மைக்கேல் பிரவீன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரில் பெண்கள் பற்றி இழிவாக ஜோ மைக்கேல் பிரவீன் பேசியதாகவும் அவர் பதிவு செய்யும் வீடியோக்களில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் பெண்கள் அமைப்புகள் குறித்தும் அவர் இழிவாக பேசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது

இந்த புகார் குறித்து விசாரணை செய்த மகளிர் போலீசார் ஜோ மைக்கல் பிரவீனை கைது செய்து அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜோ மைக்கல் பிரவீன் சிறையில் அடைக்கப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply