மீண்டும் வில்லியாக நடிக்கும் வரலட்சுமி

விஷால் நடித்த ‘சண்டக்கோழி’, விஜய் நடித்த ‘சர்கார்’ ஆகிய திரைப்படங்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்த நடிகை வரலட்சுமி மீண்டும் ஒரு வில்லி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ள இந்த படத்தில் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா ஹீரோவாகவும், ஜெகபதிபாபு இரட்டை வேடங்களில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘ரூலர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிரந்தன் பட் இசையில் உருவாகும் இந்த படத்தில் பாலகிருஷ்ணா போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply