மீண்டும் பழைய கம்பீர குரல் கேட்கும்: கருணாநிதிக்காக பிரார்த்தனை செய்யும் விஜயகாந்த்
கருணாநிதி உடல்நலம் குறித்து கேப்டன் விஜய்காந்த் கூறியபோது, அவர் மீண்டும் நலம் பெற்று, மீண்டு வர இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
கருணாநிதி திமுக தலைவராக பொறுப்பேற்று 50வது ஆண்டு ஆகியுள்ள நிலையில் வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நலிவு அடைந்துள்ளதாக தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.
அதற்கு தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே கருணாநிதி உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் விசாரித்தனர். அவர் உடல் நலத்துடன் இருப்பதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கலைஞர் விரைவில் உடல் நலம்பெற்று, மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய, நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க இறைவனை பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.