மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் காஜல் அகர்வால்
விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய படங்களிலும், அஜித்துடன் ‘விவேகம்’ படத்திலும் நடித்த நடிகை காஜல் அகர்வால் மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், இந்த படம் வெளியானவுடன் தனக்கு வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதுகுறித்து கூறிய இயக்குனர் ரமேஷ் அரவிந்த், ‘ பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் விஜய்-அட்லி படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.