மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு மீண்டும் கருப்புக்கொடி
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம கருப்புக்கொடி காட்டி வரும் வைகோவின் மதிமுக உள்பட ஒருசில கட்சிகள் இன்று மீண்டும் வரும் மோடிக்கு மீண்டும் கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டுள்ளனர்.
இன்று திருவனந்தபுரத்தில் இருந்து குமரிக்கு வரவுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக நெல்லை – கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ முழக்கமிட்டு வருகிறார். ஆனால் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வைகோவை விட போலீஸ் மறுத்துள்ளது.
கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயகத்தில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் என்றாலும் அதை அடிக்கடி பயன்படுத்துவதால் கருப்புக்கொடி காட்டுவதற்கே ஒரு மரியாதை இல்லாமல் போய்விடும் என்றும் வைகோ வேறு வகையான புதிய போரட்டங்கள் குறித்து சிந்திக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.