மீண்டும் காக்கை டுவீட் போட்ட கிரண்பேடி
புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் காக்கையின் படங்களை பதிவு செய்து ‘காக்கையின் யோகா’ என புதுவை முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை கிண்டல் செய்திருந்தார். கிரண்பேடியின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆளுனர் கிரண்பேடி இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் காக்கையின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை அவர் இயற்கை குறித்து குறிப்பிட்டிருந்தாலும் அவர் தொடர்ந்து காக்கையின் புகைப்படங்களை பதிவிட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கிரண்பேடிக்கு பதிலாக வேறொருவரை புதுவை கவர்னராக நியமனம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர். இல்லையேல் இன்னும் ஒருசில மாதத்தில் ஆட்சி மாறியவுடன் புதுவைக்கு வேறு கவர்னர் நியமனம் செய்யப்படுவார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.