shadow

மீண்டும் ஒரு ஆணவக்கொலை: ஆந்திராவில் பரபரப்பு

உடுமலை சங்கர் உள்பட பல ஆணவக்கொலைகள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நடந்து வரும் நிலையில் ஆந்திராவில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த வெங்கடரெட்டி என்பவரின் மகள் வைஷ்ணவி என்ற கல்லூரி மாணவி, தான் படித்த வந்த கல்லூரியில் படித்த மாணவர் ஒருவரை காதலித்தார்.

ஆனால் இருவரும் வேறுவேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் வைஷ்ணவியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது காதலில் வைஷ்ணவி உறுதியாக இருந்ததாகவும், பெற்றோரை மீறி காதலனை திருமணம் செய்ய முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வைஷ்ணவியின் தந்தை சொந்த மகள் என்றும் பாராமல் வைஷ்ணவியை கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த கொலை குறித்த தகவல் அறிந்த போலீசார் வைஷ்ணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி , வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

 

Leave a Reply