shadow

மீண்டும் ஆரம்பிக்கும் காவிரி பிரச்சனை

காவிரி நதிநீர் பங்கீடு விஷயமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த வழக்கின் இறுதி தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டமும் நடைபெறவுள்ளது. இதனால் காவிரி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த பிரச்சனை மீண்டும் கிளம்பியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனைத்து கர்நாடக எம்பிக்களும் காவிரி விவகாரம் குறித்து பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்பதையே இந்த செயல்கள் காட்டுவதாக அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply