மீடூ பிரச்சினையால் பொன்னியின் செல்வன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் மீடூ பிரச்சினையில் சிக்கினார் என்பதும் அவரவர் அவர் மீது பிரபல பாடகி சின்மயி மீடூ புகார் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் 12 பாடல்களையும் வைரமுத்து தான் எழுதுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் அந்த படத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பதில் கபிலன் உட்பட மூன்று பாடலாசிரியர்கள் இந்த படத்தின் பாடல்களை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது
ரூபாய் 500 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் இந்த படம் வைரமுத்துவால் எந்தவித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார் மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.