மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: அதளபாதாளத்தை நோக்கி ஆட்டோமொபைல் துறை?

கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை நலிவடைந்து வரும் நிலையில் தற்போது மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு என தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளதால் இன்னும் அந்த துறை அதளபாதாளத்திற்க்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அந்த அறிக்கையில், 31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றாலும் டீசல், பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கு மதிப்பில்லாத நிலை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது

Leave a Reply