மின்கம்பங்களை சரிசெய்ய மின் ஊழியர்களை அனுப்பிகிறார் பினராயி விஜயன்
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் உள்ள மின்கம்பங்கள் அடியோடு சேதம் அடைந்தது. மீண்டும் புதிய மின் இணைப்பு கொடுக்கும் அளவுக்கு மலைபோல் உள்ள வேலையை மின் ஊழியர்கள் இரவுபகலாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்வதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவில், அம்மாநில மின்சாரத்துறை முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மின்ஊழியர்களை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளது.
இந்த ஊழியர்கள் தமிழகம் வந்த பின்னர் மின் சீரமைப்பு பணிகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.