உதயநிதி

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலாத பார்வை மற்றும் கேட்கும் திறன் குறைந்த 43% மாற்றுத்திறனாளி மாணவர்கள் இடைநிற்றல் (discontinue) ஆக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் சமமாக கல்வியளிக்கும் கடமையை அரசு தட்டிக்கழிக்கக் கூடாது

மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைகளுக்குக் காது கொடுத்துத் தீர்வு தந்தது கழக அரசு. ஆனால், இப்போதுள்ள மத்திய அரசும், இங்குள்ள அடிமை அரசும் மாற்றுத்திறனாளிகளின் கல்வியையே கேள்விக்குறியாக்கியுள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வழியில் பாடம் கற்பிக்க அரசு முன்வர வேண்டும். என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply