shadow

மாறுவேடத்தில் சசிகலாவை சந்தித்த மூன்று அமைச்சர்கள்?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று தற்போது ஐந்து நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலாவை மூன்று அமைச்சர்கள் மாறுவேடம் அணிந்து சசிகலா தங்கியிருக்கும் வீட்டின் பின்புறமாக ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உளவுத்துறை மூலம் அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அந்த மூன்று அமைச்சர்களிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய மாவட்டங்களை சேர்ந்த இரு அமைச்சர்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் என, மூன்று அமைச்சர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விரைவில் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சசிகலாவின் பரோல் காலம் முடிவடையவுள்ள நிலையில் அதற்குள் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply