மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்தும் விசாரிக்கலாம்: நீதிமன்றம் அதிரடி

பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பகமுறைகேடு வழக்கை ரத்து செய்ய மாறன் சகோதரர்கள் கோரிய நிலையில் அவர்களுடைய கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி 4 மாதங்களுக்குள் வழக்கை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதற்கு மாறன் சகோதரர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் மாறன் சகோதரர்கள் வழக்கிற்கு ஒத்துழைக்க மறுத்தால் அவர்களை சிறையில் அடைத்து கூட விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் வரும் மக்களவை தேர்தலில் மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Leave a Reply