மார்ச் 27 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மார்ச் 27ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அவர் ஏப்ரல் 16ஆம் தேதி பிரச்சாரம் முடியும் தேதி வரை பிரச்சார செய்யவுள்ளார்.

தேமுதிக வேட்பாளர் மட்டுமின்றி அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் அவர் வாக்கு சேகரிக்கவுள்ளார். இந்த தேர்தலில் உடல்நிலை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் பிரேமலதா சூறாவளி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

மேலும் விஜயகாந்தின் இரண்டு மகன்களும் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply