shadow

மார்ச் மாதத்திலேயே வாட்டி எடுக்கும் வெயில்: தமிழகத்தில் வெப்பநிலை எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே கடுமையான வெயில் இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கடுமையாஅ வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் நேற்று வெயில் சதத்தை எட்டியது. கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் சதத்தை எட்டியதால் மக்கள் அவதியில் உள்ளனர். நேற்று திடீரென ஒரே நாளில் 3 டிகிரிக்கும் மேலாக வெயில் அதிகரித்துள்ளது.

நேற்று திருத்தணி, சேலம், மதுரை, வேலூர், கரூர், தர்மபுரி மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளில் 100க்கும் அதிகமான டிகிரியில் வெயில் கொளுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply