மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே கள்ளக்காதலன்: அதிர்ச்சி தகவல்

குஜராத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே கள்ளக்காதலன் இருந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர் தனது கணவர் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வந்த நிலையில் அந்த வீட்டிற்கு குடும்ப நண்பர் என்ற ஒருவர் அடிக்கடி வருகை தந்துள்ளார் அவருக்கும் இளம்பெண்ணின் மாமியாருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்பட்டது

இந்த நிலையில் இளம் பெண்ணின் மாமியார் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மர்ம நபர் வந்ததாகவும் அவர் அந்த இளம்பெண்ணிடம் அன்புடன் பேசி அவரை மயக்கிதாவும் அதன் பின்னர் இளம் பெண்ணுக்கும் அந்த மர்மநபருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

ஒரே நேரத்தில் மாமியார், மருமகள் ஆகிய இருவருடனும் மாறி மாறி கள்ளகாதல் செய்து வந்த அந்த மர்ம நபர் ஒரு நாள் பிடிபட்டதை அடுத்து அந்த குடும்பத்தினர் அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply