மான்வேட்டை வழக்கு: நடிகை தபு உள்பட ஐவருக்கு சிக்கல்

மான்வேட்டை வழக்கில் சயிப் அலிகான், சோனாலி பிந்த்ரே, நீலம் கோத்தாரி, தபு, துஷ்யந்த் சிங் ஆகிய 5 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இதனையடுத்து மான்வேட்டை வழக்கில் சயிப் அலிகான், சோனாலி பிந்த்ரேவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் நீலம் கோத்தாரி, தபு, துஷ்யந்த் சிங் ஆகியோரும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முடிந்துபோனதாக கருதப்பட்ட மான்வேட்டை வழக்கில் 5 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply