மாநில அரசுக்கு அதிகாரம் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்: அமீர்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, ஸ்டெர்லைட் ஆலை மூடுதல் உள்பட பல நல்ல விஷயங்கள் மாநில அரசுக்கு உரிமை இருந்திருந்தால் நடந்திருக்கும் என இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
கும்பகோணத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட அமீர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என்றும், மாநில அரசுக்கு என தனியாக அதிகாரம் இருந்திருந்தால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருக்கும் எனவும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினர்.
இயக்குனர் அமீரின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.