மாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா?
புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனியார் நிறுவனங்கள், மற்றும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள பேனர் மற்றும் கட் அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சினிமா நடிகர்களுக்கு வைத்துள்ள பேனர்களும் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா’ புயல் கடலூர்-பாம்பன் இடையே 15ஆம் தேதி கரையை கடக்கும் என்ற தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து ‘கஜா’ புயல் காரணமாக புதுச்சேரி முழுவதும் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வைத்துள்ள பேனர் மற்றும் கட் அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.