மாணவி தற்கொலை எதிரொலி: ரணகளமான சத்யபாமா பல்கலைக்கழகம்
சென்னை செம்மேஞ்சேரி பகுதியில் உள்ள சத்யபாமா பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த ஆந்திரமாநிலத்தை சேர்ந்த ராகமோனிகா என்ற மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் மாணவர்களிடையே பரவியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த விடுதியில் இருந்த மாணவர்கள் முதலில் போராட்டத்தில் இறங்கினர். ஆனால் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பல்கலைக்கழக வளாகமே ரணகளமானது. விடுதிகள், பல்கலைக்கழக நூலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பேருந்துகள், மரங்கள் தீயில் கருகின.
இதுகுறித்து தகவல் அறிந்தததும் விரைந்து வந்த போலீசார் மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மாணவியின் தற்கொலைக்கு இதுவரை காரணம் என்ன என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.