மாணவர்கள் – ஆசிரியர் விகிதாசாரம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
அரசு பள்ளிகளில் மாணவர்கள் – ஆசிரியர் விகிதாசாரம் குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். இதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர் இருக்க வேண்டும் என்றும், 6 முதல் 8 வகுப்பு வரையில் 50 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 6 முதல் 10-ம் வகுப்பு வரையில் பாடத்திற்கு 1 ஆசிரியர் வீதம் 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விபரங்களை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆங்கில வழி வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும், 15-க்கு குறைவாக மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.