shadow

மழை வந்தால் தண்ணீர் தேங்குவது சகஜமே: அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது ‘மழை என்று வந்தால் தண்ணீர் தேங்குவது சகஜமே என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக வெளிவந்துள்ள தகவல் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நேற்று ஒரு அமைச்சர் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டில் மழை பெய்தபோது தேங்கிய தண்ணீரை விட சென்னையில் குறைவான தண்ணீரே தேங்கியுள்ளதாக கூறிய நிலையில் இன்று அமைச்சர் ஜெயகுமார் ‘மழை என்று வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும்’ என்று கூறியுள்ளதை எதிர்க்கட்சியினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் கூறியபோது, ‘மழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை இந்த மழை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் மழை வந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதல்ல’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply