மழை பெய்ய தவளைகளுக்கு திருமணம், மழை நிற்க தவளைகளுக்கு விவாகரத்து

கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் மழை பெய்ய வேண்டும் என அம்மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன்பின்னர் கடந்த இரண்டு மாதமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது

தற்போது அதிகப்படியான மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு இருப்பதை அடுத்து ஜூன் மாதம் திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு அதே கிராமத்தினர் தற்போது விவாகரத்து செய்து வைத்துள்ளனர். மழை பெய்ய வேண்டும் என்றால் தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதும் மழை நிற்க வேண்டுமானால் திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும் என்பதும் அந்த கிராமத்தினர் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் தவளைகளுக்கு விவாகரத்து செய்த பின்னர் மழை நின்று விட்டதாக அந்த கிராமத்தினர் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply