அதிர்ச்சி தகவல்

மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மலேசிய அரசு கருதுகிறது

இந்தியாவில் கொரோனா தாக்கம் மிக அதிகம் இருப்பதால் இந்தியாவில் இருந்து வருபவர்களால் மலேசியர்களும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனை அடுத்து நீண்டகால குடியுரிமை அனுமதி அட்டை வைத்திருந்தாலும் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் இடையே தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளில் உள்ளவர்களுக்கு மலேசியாவில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply